Posts

Showing posts from July, 2020

வாழ்வியல் சிந்தனை 🤔🤔🤔 பக்குவம் அவசியம்

Image
*தினம் ஒரு கதை!  *பக்குவம்…*   ஒரு மங்கோலியனிடம் ஒரு குதிரை இருந்தது. அது ஒருநாள் மலைக்காட்டுப் பக்கம் ஓடிவிட்டது. இதைக் கேள்விப்பட்ட பக்கத்து வீட்டுக்காரன் அனுதாபப்பட்டு சொன்னான். “இது உனக்கு போதாத காலம் போலிருக்கிறது” என்று. அதைக் கேட்டு கலங்காத மங்கோலியன் சொன்னான். *“ விடு! எல்லாம் நன்மைக்கே”* சிலநாட்கள் சென்றதும் ஓடிப்போன குதிரை திரும்ப வந்தது. அது தனியாக வராமல் கூடவே காட்டிலிருந்து ஐந்து குதிரைகளையும் அழைத்து வந்திருந்தது. அன்று முதல் மங்கோலியன் ஆறு குதிரைகளுக்குச் சொந்தக்காரன் ஆனான். இதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன் வந்து சொன்னான். உனக்கு அதிர்ஷ்டம் அடிக்க ஆரம்பித்து விட்டது என்று. இதைக் கேட்டு மங்கோலியன் சந்தோஷமாய் சொன்னான். “ எல்லாம் நன்மைக்கே”.  மறுநாள் காட்டுக் குதிரை ஒன்றின்மேல் மங்கோலியனின் மகன் சவாரி செய்ய ஏறினான். குதிரை அவனை கீழே தள்ளி விட்டது. கீழே விழுந்தவன் கால் உடைந்து படுத்த படுக்கையானான். அப்போது பக்கத்து வீட்டுக்காரன் வந்து அனுதாபத்துடன் கூறினான். இதென்ன உனக்கு கெட்ட நேரம் வந்துவிட்டது என்று. அதைக் கேட்டு கலங்காமல் மங்கோலியன் சொன்னான். ‘எல்லாம் ந...

மகிழ்ச்சி என்பது...?

Image
தினம் ஒரு கதை! மகிழ்ச்சி என்பது ...   அந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குருவி  அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை. வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது. எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது. ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை. அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது. காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன. அவரிடம் குருவி வழி கேட்டது. “எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன். அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர். ஒரேயோரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது. குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க, அந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்க...

சிட்டுக்குருவியை காக்கும் கிராமம்

தினம் ஒரு தகவல்  *சிட்டுக்குருவியை காக்கும் கிராமம் - குருவிக்காக இருளில் வாழும் கிராம மக்கள்* சிட்டுக்குருவிகள் கூடு கட்டினால் ஊருக்கு நன்மை பெருகும் என்ற நம்பிக்கையில், மின் இணைப்பு பெட்டியில், கட்டப்பட்டிருந்த கூட்டை களைக்காமல், இருளில் வாழ்ந்து வருகிறது ஒரு கிராமம்.  சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே உள்ளது பொத்தகுடி கிராமம். இங்குள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு இணைப்பு பெட்டியில்  குருவிக்கூடு கட்டி, முட்டையிட்டு அடைகாத்து வந்தது. இதையறிந்த இந்த கிராமத்து இளைஞர்கள், அதை பாதுகாக்க தொடங்கினர்.   தெருவிளக்குகள் எரிய மொத்த கன்ட்ரோல் ஸ்விட்ச்சும், குருவி கூடு கட்டிய மின் இணைப்பு பெட்டியில் இருப்பதால், சுவிட்சை ஆன் செய்யக்கூட முடியவில்லை. சுவிட்ச் போட்டால், குருவி பறந்து என்பதால், கடந்த 30 நாட்களுக்கும் மேலாக தெரு விளக்குகள் எரியாமல் இருளில் வாழ்ந்து வருகிறார்கள் பொத்தகுடி கிராமமக்கள்.  சின்னஞ்சிறிய குருவிகள் கூடு கட்டினால் நல்ல சகுனம் என்றும், ஊருக்கும் மக்களுக்கும், நன்மை அதிகரித்து, அதிர்ஷ்டம் பிறக்கும் என்று கூறுகின்றனர் அக்கிராம மக்க...

காமராஜரின் பொன்மொழிகள்

Image
             தினம் ஒரு தகவல்   காமராஜரின் பொன்மொழிகள் !   🎇 நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதும் கதாநாயகன் தான்! 🎇 எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல ஏதேனும் சிறப்பு சக்திகள் இருக்கத்தான் செய்யும்! 🎇 எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை வரலாறு ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை! 🎇 சமதர்மச் சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை, அனைவருக்கும் கல்வியும் உழைப்புக்கான வாய்ப்பும் தந்தால் போதுமானது! 🎇 பணம் இருந்தால் தான் எனக்கு மரியாதை தருவார்கள் என்றால் அந்த மரியாதை எனக்குத் தேவையில்லை! 🎇 ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது ஒரு குடும்பத்திற்கு கல்வி புகட்டுவது ஆகும்! 🎇 நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காதவன் பிணத்திற்கு சமமாவான்! 🎇 எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம்! 🎇 கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்த ஒரு மனிதரும் அவரது லட்சியத்தை அடைவது இல்லை! 🎇 ஒன்றை செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என்று எண்ண வேண்டும்!  🎇 சுதந்திரமான வாழ்க்கை என்பது யாருக்கும் எதற்கும் கட்டுப்படாத...

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்!

Image
                      தினம் ஒரு தகவல் பழமொழிகளை அறிந்து கொள்வோம்! 🙏ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்! 👎விளக்கம்:  மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும். 👍சரியான விளக்கம்:  ஊரான் வீட்டு பிள்ளையாகிய தன் கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும்  உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானே வளரும் என்பதே உண்மையான பொருள். 🙏பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! 👎விளக்கம்:  மணமான பின், பதினாறு குழந்தைகளை பெற்று வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசிர்வாதம் செய்வார்கள். 👍சரியான விளக்கம்: வாழ்க்கையில் 16 வகையான செல்வங்களான உடலில் நோயின்மை, நல்ல கல்வி, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம்,ஒப்பற்ற அழகு, அழியாப் புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனத்தில் துணிவு, நீண்ட வாழ்நாள் (ஆயுள்), எடுத்தக் காரியத்தில் வெற்றி, நல்ல ஊழ் (விதி), மற்றும் இன்ப நுகர்ச்சி பெற்று வளமாக வாழுங்கள் என்று பொருள். 🙏ஆவதும் பெண்ணாலே, அழிவது...

சக மனிதன்

Image
                    தினம் ஒரு தகவல்    

நட்சத்திரத்தின்_காலம்

Image
                      தினம் ஒரு தகவல்  நட்சத்திரத்தின்_காலம் இரவு நேரத்தில் வானத்தில் மின்னும் நட்சத்திரத்தை(விண்மீன்) ரசிகாதவர்கள் யாரும் இருக்க மாட்டோம். இந்த நட்சத்திரங்கள் புவியில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?  இதெல்லாம் ஒரு கேள்வியா? அது ரொம்ப தூரத்தில் இருக்கிறது என்று உங்கள் mind voice யில் சொல்வது கேட்கிறது. சரி ரொம்ப தூரம் என்றால் எவ்வளவு தூரம்? சூரியனை தவிர நாம் காணும் ஏனைய அனைத்து நட்சத்திரங்களும் புவியில் இருந்து பல ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது.  கிலோமீட்டர் போன்ற கணக்கீடுகளால் எளிமையாக அளவிட முடியாத தூரத்தை ஒளியாண்டு என்று அலகின் மூலம் அளவிடுகிறோம்.  1 ஒளியாண்டு என்பது ஒளி ஒரு ஆண்டில் செல்லும் தூரமே ஒரு ஒளியாண்டு . ஒளியானது ஒரு வினாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடியது. அப்படி ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஒளி ஒரு வருடத்திற்கு தொடர்ந்து பயணித்தால் எவ்வளவு தூரம் செல்லுமோ அந்த தூரம் தான் 1 ஒளியாண்டு தூரம். அப்ப...

துருப்பிடித்த மிதிவண்டி

Image
                         NEWS BOOSTER துருபிடித்த_மிதிவண்டி இந்த உலகில் அனைத்தும் இயங்கிக்கொண்டே இருக்கிறது. அனைத்து பொருட்களும் இயங்கிக்கொண்டே இருக்கிறது, நம் சிந்தனை இயங்கிக்கொண்டே இருக்கிறது, சமூகம் இயங்கிக்கொண்டே இருக்கிறது.    உடனே நமக்கு சில கேள்விகள் எழலாம் உயிருள்ள பொருட்கள் தானே இயங்க முடியும் உயிரற்ற பொருட்கள் எப்படி இயங்க முடியும் அதன் மீது வெளியில் இருந்து ஆற்றல் செலுத்தாத வரையில் எந்த உயிரற்ற பொருளும் இயங்கா நிலையில் தானே இருக்கிறது? என்று நீங்கள் கேட்கலாம்.  ஒரு மிதிவண்டி இருக்கிறது. அதன் மீது நாம் எறி மதித்தால் மட்டுமே அது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்கிறது. இல்லாவிட்டால் ஒரே இடத்தில் நிற்கிறது. எவ்வளவு காலம் ஆனாலும் அதன் மீது நாம் ஆற்றல் செலுத்தாதவரை அது அந்த இடத்தைவிட்டு நகரப்போவது இல்லை. எனவே அது இயங்கவில்லை என்று நாம் அர்த்தம் கொள்கிறோம். சரி அந்த மிதிவண்டியை அப்படியே நான்கைந்து வருடங்கள் நிருத்தி வைக்கிறோம். இப்போது அந்த மிதிவண்டி நான்கைந்து வருடத்திற்கு முன் நாம் எந்த...

யாருக்கெல்லாம் தெரியும் கன்னியாகுமரி தொட்டிப்பாலம் பற்றி

Image
                                    அடடே கன்னியாக்குமரி மாவட்டத்தின் ஒரு பெயர்பெற்ற சுற்றுலாத்தலம் மாத்தூர் தொட்டிப் பாலம். இது காமராஜர் ஐயாவின் சாதனைகளில் ஒன்று .   கன்னியாகுமாரி பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க முதல்வரால் 1963யில் தொடங்கப்பட்ட இப்பாலம் 1969ல் முழுமையாக கட்டப்பட்டு நிறைவுபெற்றது. இப்பலாம் *தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப் பாலம்* என்னும் பிரசித்தி பெற்றது. தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் எனவும், இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள  மகேந்திரகிரி  மலையில்  உற்பத்தியாகிறது  பறளியாறு. அருகில் இருந்த மலைகளால் பறளியாறு  கன்னியாகுமாரி மாவட்டம்,  மாத்தூர் பகுதில் பாய முடியாமல் போனதால் அந்த பகுதியில்  வறட்சி  ஏற்பட்டது.  இந்த வறட்சியை தீர்க்க மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற...

தஞ்சாவூரில் அலுவலக பணிக்கு நேரடி தேர்வு நடைபெறுகிறது

Image
           *🛑 MEGA JOB OPPORTUNITY ⛔* Share ur friend *‼தஞ்சாவூரில் அலுவலக பணிக்கு நேரடி தேர்வு நடைபெறுகிறது‼*  *👩🏻‍💼👨🏻‍💼ஆண்கள் மற்றும் பெண்கள் தேவை👩🏻‍💼👨🏻‍💼* *‼கல்வித்தகுதி:* 10th, 12th, B.Sc, B.A, B.Com, BBA, BCA, B.Tech, Dip, B.E, & Master Degree Also *‼ஆரம்பதேதி:* 06.07.2020 *‼கடைசிதேதி* 20.07.2020 *‼விண்ணப்பிக்கும்  முறை:* *SEND YOUR RESUME * 7550322152 *‼பணியிடம்:* பழைய பேருந்து நிலையம் அருகில், [*தஞ்சாவூர்* ] *‼வயதுவரம்பு:* 18 - 30 *‼பணிகள் :*  👨🏻‍🎓👩🏻‍🎓OFFICE ASSISTANCE 👨🏻‍🎓👩🏻‍🎓LADIES STAFF'S 👨🏻‍🎓👩🏻‍🎓FILE MAINTENANCE *‼குறிப்பு:* 💁‍♂ இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கும் பயன்படுத்தி மற்றவர்களுக்கும் பகிருங்கள் அதிகம் ஷேர் பண்ணுங்க நன்றி.🙏 *‼தொடர்புக்கு :-* 7550322152 * *⭕Date ::- 06/07/2020 to 20/07/2020* *📮⭕தஞ்சாவூர் மாவட்டம்⭕📮* ⭕ *திருவையாறு* 🛑 *மன்னார்க்குடி* ⭕ *கும்பகோணம்*  🛑 *செங்கிப்பட்டி* ⭕ *திருக்காட்டுப்பள்ளி* 🛑 *திருவெறும்பூர்* ⭕ *புதுக்கோட்டை* 🛑 *லால்குடி* ⭕ *பட்டுக்கோட்டை* 🛑 *பாபந...

ஒருவரின் தரம்

Image
                 ஒருவரின் தரம்!   ஒரு குடும்பத்தில் தந்தை இறந்து போனார். வயதுக்கு வந்த மகன் குடும்பப் பொறுப்பு ஏற்றான். அப்பா இறந்த பிறகு அவரது டைரியில் இருந்த குறிப்பு ஒன்று சற்றே அதிர்ச்சி தந்தது. அதில் நண்பரிடம் ஒரு லட்சம் கடனாக வாங்கியிருப்பதைத் தந்தை குறிப்பிட்டிருந்தார். அவர் கடன் வாங்கிய விபரம் குடுபத்தில் யாருக்கும் தெரியவில்லை. இறப்பின் போதும், இறப்பிற்குப் பிறகும் கடன் கொடுத்த அந்த அப்பாவின் நண்பரை வேறு வேறு இடங்களில் சந்தித்து விட்டான். அவரும் இவனிடம் நலம் விசாரித்ததோடு சரி. அவனது அப்பாவிடம் வழங்கியிருந்த கடன் குறித்து பேசாதது ஆச்சரியம் தந்தது. எனவே தந்தையின் நண்பரைத் தேடிச் சென்றான். சந்தித்து, விவரம் சொன்னான். அவர் மெதுவாகச் சொன்னார்,"உங்க அப்பா எனக்குப் பல நேரங்களில் உதவியிருக்கிறார். அவர் ஒரு சமயத்துல உங்க அம்மா உடல் நலம் பாதிக்கப்பட்டபோது கேட்டார். கொடுத்தேன்." "அதுக்கு எந்த ஆதாரமும் என்னிடம் இல்லை. திடீர்னு உங்கப்பா இறந்துட்டார். இந்த நிலையில் எந்த ஆதாரமும் இல்லாம, உங்கப்பா எங்கிட்ட கடன் வாங்கியிருக்காருன்னு கேட்கு...

தோற்க_கற்றுக்_கொள்வோம்

Image
                            DAILY NEWS *# தோற்க_கற்றுக்_கொள்வோம் 😉😉* என்னடா இது புதுசா இருக்கு?  எல்லாரும் வாழ்க்கையில வெற்றி பெறனும், எல்லாத்துலயும் முதலா வரணும்னு தான் சொல்லுவாங்க. இங்க என்னன்னா தோற்க கற்றுக்கொள்வோம்னு இருக்கேனு பாக்குறீங்களா? ஆமா, எல்லாரும் வெற்றின்ற ஒரு விஷயத்துல மத்த ஒன்ன மறந்துடுறோம். ஒன்னு மட்டும் இல்ல நெறய மறந்துடுறோம். என்னனு கேக்குறீங்களா? ஏதோ, ஒரு போட்டியோ அல்லது ஒரு தேர்வோ நாம ஜெய்ச்சவங்களையும் முதல்ல வந்தவங்களையும் மட்டுமே கொண்டாடுறோம். போற்றி புகழுறோம். மத்தவங்களை என்னைக்காவது நினைச்சி பாத்திருக்கோமா? உண்மையை சொல்லனும்னா நினைக்குறது இல்ல. எதார்த்தமா சொல்லனும்னா தேர்வோ, போட்டியோ இங்க அது ஒரு சண்டையாகவும், நான் பெரியவனா, நீ பெரியவனா என்ற மோதலாக தான் இருக்கு. தவிர, போட்டி என்பது நம் திறமையை வளர்த்துக்குற ஒரு நிகழ்வாகவும், தேர்வை நம் அறிவை பண்படுத்துற விசயமாகவும், அதாவது அறிவை சுயபரிசோதனை செஞ்சிக்கிற ஒரு விசயமா நாம இது வரைக்குமே பார்ப்பதில்ல.  மாறா,  இங்க என்னவா பாக்குறாங்கன...

புரிதலும், தெளிதலும்.

Image
                      தினம் ஒரு தகவல்   *புரிதலும், தெளிதலும்.* பணக்கார வியாபாரி ஒருவர் இறக்கும் நிலையில் இருந்தார். அவர் தன் மகனுக்கு நான்கு வியாபார ரகசியங்களைச் சொல்ல யத்தனித்தார். வியாபார இடத்திற்கு நிழலில் போ, நிழலில் வா. இரண்டாவது, கடன் கொடு... திருப்பி நீயாகக் கேட்காதே. மூன்றாவது அதிக விலைக்கு வாங்கு, மலிவு விலையில் விற்பனை செய். நான்காவது ரகசியத்தைச் சொல்லும் முன், வியாபாரியின் மூச்சு நின்றுவிட்டது. தன் தந்தை சொன்னபடியே செய்தான். வீட்டிலிருந்து கடை வரைக்கும் பந்தல் அமைத்து நிழலிலேயே போய் வந்தான். கடன் கொடுத்தான். எவரிடமும் திருப்பிக் கேட்கவில்லை. பொருட்களை அதிக விலைக்கு வாங்கி, குறைந்த விலைக்கு விற்றான். காலம் ஓடிக்கொண்டிருந்தது. பணம் கரைந்து போய்விட்டது. அவன் உறவினர் ஒருவர் அவனை பார்க்க வீட்டுக்கு வந்தார். நிலைமையை அறிந்தார். ஒரு பணக்காரனின் மகன் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை அறிந்து அனுதாபத்துடன் விவரம் கேட்டார். தந்தையின் மூன்று ரகசியங்களை வியாபாரியின் மகன் சொன்னான். அடப்பாவி, உன் தந்தை சொன்னவற்றை நீ சரியாகப் புரி...

இப்படி செஞ்சா நம்ம நாடு தா கெத்து

Image
                AVOID OTHERS THINGS 🥀 இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் 🌷 நம் நாட்டில்  நேற்று, நொய்டா வணிகர்கள் நாட்டுக்கும் இராணுவத்திற்கும் ஆதரவாக தங்கள் இலாப இழப்பை கருத்தில் கொள்ளாமல் 150 மில்லியன் சீன பொருட்களின ஆர்டர் ரத்து செய்து விட்டனர். இன்று மாலை கணக்கின்படி  இந்த  பொருட்களின்  NCR மதிப்பின் படி  சுமார் 1500 கோடி மட்டுமே, ஆனால் சீனா கொதித்துப் போயுள்ளதைக் கண்டால், நாடு முழுவதும் இருந்து சுமார் 2 பில்லியன் டாலர்கள் ரத்து செய்யப்பட்டதுப் போலத் தெரிகிறது. அதனால் தான், இன்று சீனாவின் அரசு  சின்ஹூவா பத்திரிகை    நிறுவனம் தங்கள் ஜனாதிபதியிடம் சென்று டெல்லியை அடக்கி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.  2 பில்லியனுக்கே இந்த நிலை என்றால் 62 $ பில்லியனுக்கான ஆர்டர் இரத்து  செய்யப்பட்டால் என்ன ஆகும்? NSG மற்றும் Masood Azar போன்றவர்களை  வீட்டோ அதிகாரத்தினால் தடுத்த  சீனாவை  நம் நாட்டு வணிகர்கள் மண்டியிட வைத்திருக்கின்றனர் அதுவும் அரசின் ஆணையில்லாமலேயே.... ஒரு வேளை, நாம் அனைவரும்  சீன...

👍இனி வாய்ப்பை நழுவ விடமாட்டீர்கள் 👍

Image
    WELCOME TO SK NEWS   * தினம் ஒரு கதை !*  வாய்ப்பை நழுவவிடாதீர்கள்...!! ஒரு இளைஞன், விவசாயி ஒருவரின் மகளை திருமணம் செய்ய விரும்பி அவரிடம் சென்று அனுமதி கேட்டான். அதற்கு அந்த விவசாயி இளைஞனைப் பார்த்து சொன்னார். தம்பி... நீ என் மகளை மணக்க விரும்பினால், நான் வளர்க்கும் மூன்று காளைகளை அடுத்தடுத்து அவிழ்த்து விடுவேன். அதில் ஏதாவது ஒன்றின் வாலை நீ தொட்டால் போதும். என் மகளை மணம் முடிக்க சம்மதிக்கிறேன் என்று கூறினார். அதற்கு அந்த இளைஞனும் ஒத்துக்கொண்டான். மாடுகள் அடைக்கப்பட்டிருந்த தொழுவத்தின் கதவுகள் திறந்தது. முதலில் ஒரு மாடு வந்தது. மிகவும் முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட அந்த மாடு சீறியபடி பாய்ந்து வந்தது. அதை பார்த்த இளைஞன் வாலை பிடிக்கத் தயங்கி அடுத்த மாட்டை பார்க்கலாம் என்று விட்டுவிட்டான். சிறிது நேரத்தில் அதை விட பெரிய மாடு வெளியே ஓடி வந்தது. பார்க்கவே பயங்கரமான தோற்றம். அவனை முட்டி தள்ளுவதற்காக கடும் வேகத்துடன் ஓடி வந்தது. இளைஞன் அச்சப்பட்டு இதுவும் வேண்டாம். மூன்றாவதை பார்க்கலாம் என்று முடிவு செய்து வேகமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டான். ஓடி வந்த மாடு அத...

இந்தியர்கள் அனைவரும் பார்க்கவும்

Image
            அனைவரும் அறிந்ததே இந்தியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நாட்டை பேணிக் காக்க வேண்டும்     ஆனால் அந்நிய நாட்டு பொருள்களால் அனைவரும் மாற்றப்படுகிறார்கள் இதை அனைத்து மக்களும் உணர வேண்டும்      இந்தியர்கள் அந்நிய நாட்டு பொருள்களுக்கு அடிமையாக்கப்படுகின்றனர் என்று தானே சொல்லவேண்டும் 👇👇👇👇👇👇👇👇👇👇👇 இந்த வீடியோ காட்சிகளை பார்த்து அந்நிய நாட்டு பொருள்களை அறவே தவிர்க்க முயற்சி செய்ய முன் வாருங்கள் நண்பரே                                   நன்றி