காமராஜரின் பொன்மொழிகள்
தினம் ஒரு தகவல்
காமராஜரின் பொன்மொழிகள்!
🎇 நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதும் கதாநாயகன் தான்!
🎇 எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல ஏதேனும் சிறப்பு சக்திகள் இருக்கத்தான் செய்யும்!
🎇 எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை வரலாறு ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை!
🎇 சமதர்மச் சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை, அனைவருக்கும் கல்வியும் உழைப்புக்கான வாய்ப்பும் தந்தால் போதுமானது!
🎇 பணம் இருந்தால் தான் எனக்கு மரியாதை தருவார்கள் என்றால் அந்த மரியாதை எனக்குத் தேவையில்லை!
🎇 ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது ஒரு குடும்பத்திற்கு கல்வி புகட்டுவது ஆகும்!
🎇 நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காதவன் பிணத்திற்கு சமமாவான்!
🎇 எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம்!
🎇 கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்த ஒரு மனிதரும் அவரது லட்சியத்தை அடைவது இல்லை!
🎇 ஒன்றை செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என்று எண்ண வேண்டும்!
🎇 சுதந்திரமான வாழ்க்கை என்பது யாருக்கும் எதற்கும் கட்டுப்படாத வாழ்க்கை என்று பொருளல்ல, பிறரிடம் எதையும் எப்போதும் யாசிக்காத வாழ்க்கையே சுதந்திரமான வாழ்க்கை
JOIN US👇👇👇👇👇👇👇
THANKYOU ALL
Comments
Post a Comment